Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

‘யார் வெற்றி பெற்றிருந்தாலும் மகிழ்ச்சியே’: தங்க மகனின் தாய் சரோஜ் தேவி சொன்ன அசத்தல் பதில்

புதுடெல்லி: மகனின் வெற்றி குறித்த பேசிய நீரஜ் சோப்ராவின் தாய், "இது மகிழ்ச்சிக்குரிய தருணம். யார் வெற்றி பெற்றிருந்தாலும் மகிழ்ச்சியே" என்று கூறி அனைவரின் இதயங்களையும் கவர்ந்துள்ளார்.

இந்தியாவின் தங்கமகனான நீரஜ் சோப்ரா நட்சத்திர வீரராக மட்டுமில்லை, அனைவராலும் விரும்பப்படும் வீரராகவும் மாறியிருக்கிறார். உலக சாம்பியன்ஷிப் தடகளப் போட்டியின் இறுதியில் அவர் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீமுடன் போட்டியிட வேண்டி இருந்தது. விளையாட்டு உலகில் எந்த வகையான போட்டி என்றாலும் இந்தியா பாகிஸ்தான் போட்டி என வரும்போது ஒரு பரபரப்பு தொற்றிக்கொள்ளும். இந்தப் போட்டியிலும் அது இருந்தது. போட்டி முடிந்ததும், அர்ஷத் நதீம் தனக்கு விருப்பமான வீரர் என்றும், அவர் வெள்ளிப்பதக்கம் வென்றது தனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் தெரிவித்திருந்தார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்