Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

உலக தடகள சாம்பியன்ஷிப் | ஈட்டி எறிதலில் தங்கம் வென்று நீரஜ் சோப்ரா வரலாற்று சாதனை: தலைவர்கள் வாழ்த்து

புடாபெஸ்ட்: உலக தடகள சாம்பியன்ஷிப்பில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றார். இதன்மூலம் உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் உலக தடகள சாம்பியன்ஷிப் நடைபெற்று வந்தது. நிறைவு நாளான நேற்று முன்தினம் ஆடவருக்கான ஈட்டி எறிதலில் இறுதிப் போட்டி நடந்தது. இதில் ஒலிம்பிக் சாம்பியனான இந்தியாவின் நீரஜ் சோப்ரா தனது முதல் முயற்சியை ஃபவுல் செய்தார். எனினும் 2-வது வாய்ப்பில் 88.17 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து பட்டியலில் முதலிடம் பிடித்தார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்