Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

“அவரைவிட சிறந்த சுழற்பந்து வீச்சாளர் இந்திய அணியில் இல்லை” - ஹர்பஜன் சிங் கருத்து

புதுடெல்லி: அண்மையில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்திய தேர்வுக்குழு சுழற்பந்து வீச்சாளர் சாஹலை தேர்வு செய்யாதது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார் முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங்.

17 வீரர்கள் அடங்கிய ஆசிய கோப்பை தொடருக்கான ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியில் அனுபவ வீரர்கள் அஸ்வின், சாஹலுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இது குறித்த கேள்விக்கு கேப்டன் ரோகித் விளக்கமளித்தார். “தற்போது 17 வீரர்களை மட்டுமே தேர்வு செய்ய முடிந்ததால் யுவேந்திர சாஹல் வெளியே இருக்கிறார். அவரை நாங்கள் தேர்வு செய்ய வேண்டும் என்றால் எங்களுக்கு உள்ள ஒரே வழி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரை நீக்க வேண்டும்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்