Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ஆர்சிபி அணியின் தலைமை பயிற்சியாளர் ஆனார் ஆண்டி ஃபிளவர்

பெங்களூரு: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தலைமை பயிற்சியாளராக ஆண்டி ஃபிளவர் நியமிக்கப்பட்டுள்ளார். அந்த அணியின் சாம்பியன் கனவை அவர் மெய்பிப்பார் என்ற எதிர்பார்ப்பில் இந்த நகர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த 2008 முதல் ஐபிஎல் கிரிக்கெட்டில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடி வருகிறது. இதுவரை அந்த அணி ஒரு முறை கூட சாம்பியன் பட்டம் வென்றதில்லை. ஐபிஎல் கிரிக்கெட்டில் 3 சீசனில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. 5 முறை பிளே ஆஃப் சுற்றில் விளையாடி உள்ளது. அந்த அணியின் வீரர்கள், உரிமையாளர் மற்றும் ரசிகர்கள் என அனைவரது நெடுநாள் கனவாக இருப்பது ஐபிஎல் கோப்பை தான் என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்