Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

10 ஆண்டுகளாக இந்திய மண்ணில் அரைசதம் காணாத ஜடேஜா உலகக் கோப்பையில் சாதிப்பாரா?

உலகக் கோப்பைக்குச் செல்வதற்கு முன்னால் இந்திய அணி தன் பிரச்சினைகளை ஓரளவுக்குக் களைந்துள்ளது என்றே கூற வேண்டும். ஓப்பனிங்கில் ரோகித், கில் நல்ல பார்மில் இருக்கின்றனர். மிடில் ஆர்டரில் கோலி, ஸ்ரேயஸ் அய்யர், கே.எல்.ராகுல், சூரியகுமார் வலுவாக உள்ளனர். ஹர்திக் பாண்டியா 10 ஓவர்கள் வீச முடியவில்லை எனில் இவரா, ஜடேஜாவா என்பதில் தேர்வுப்பிரச்ச்னை உள்ளது. ஆனால் ஜடேஜா பிரச்சினை என்னவெனில் இந்திய மண்ணில் கடந்த 10 ஆண்டுகளில் ஜடேஜா ஒரு அரைசதம் கூட எடுக்கவில்லை என்பதுதான் பலரும் அறியாத புள்ளி விவரமாகும்.

அன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் ஜடேஜாவின் ஆட்டம் பலருக்கும் எரிச்சலை ஏற்படுத்துவதாக அமைந்தது. ஷாட்களில் பவர் இல்லை. ஃபுல் ஷாட் ஆடினால் உடல் முழுதையும் திருப்பி ததிங்கிணத்தோம் போடுகிறார். பந்தை பீல்டர்களின் கைகளுக்கு நேராக அடிக்கிறார். அன்று 36 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார். ஆனால் ஆட்டத்தில் இலக்கை விரட்டுவதற்கான எந்த ஒரு தீவிரமும் இல்லை... இல்லவே இல்லை.


கருத்துரையிடுக

0 கருத்துகள்