Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ஆப்பிள் ஐபோன் 15-ல் யுஎஸ்பி-சி போர்ட்: ட்ரோல் செய்த சாம்சங்

சான்பிரான்சிஸ்கோ: ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 15 சீரிஸ் போன்களை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. யுஎஸ்பி-சி டைப் போர்ட் உடன் வெளிவந்துள்ள நிலையில் ஆப்பிளின் முயற்சியை ட்ரோல் செய்துள்ளது சாம்சங் நிறுவனம்.

கடந்த 2007-ல் ஆப்பிள் நிறுவனம் தனது முதல் ஐபோன் மாடலை அறிமுகம் செய்தது. ஸ்மார்ட்போன் வணிகம் சார்ந்த உலக சந்தையில் சுமார் 15 சதவீத பங்கை ஐபோன் கொண்டுள்ளது. இருந்தாலும் உலக அளவில் ஸ்மார்ட்போன் வருவாயில் 50 சதவீதத்தை ஆப்பிள் நிறுவனம்தான் ஈட்டி வருவதாக கடந்த ஆண்டு வெளியான தரவுகள் சொல்கின்றன. தங்கள் பயனர்களுக்கு புதிய அப்டேட் வழங்கும் வகையில் புதிய மாடல் போன்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் நடப்பு ஆண்டில் ஐபோன் 15 சீரிஸ் போன்கள் அறிமுகம் செய்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்