Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

உலகக் கோப்பை நினைவுகள் | 1983-ல் உலக கிரிக்கெட்டை புரட்டிப்போட்ட இந்தியா

1983-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த மேற்கு இந்தியத் தீவுகளை வீழ்த்தி இந்தியா முதன் முறையாக உலகக் கோப்பையை வென்றுவ ரலாறு படைத்த நாள் அது. நாட்டின் மூலைமுடுக்கு எல்லாம் கிரிக்கெட் பாய்ச்சல் எடுப்பதற்கும், எதிர்கால தலைமுறை கிரிக்கெட் வீரர்கள் உத்வேகம் பெறுவதற்கும் இந்திய கிரிக்கெட்டுக்கு உண்மையிலேயே அது ஒரு வரலாற்று நாள். மேலும் அந்த தருணம் இந்திய கிரிக்கெட்டையும் உலக கிரிக்கெட்டையும் புரட்டி போட்ட பெரும் திருப்பமாக அமைந்தது.

1975 மற்றும் 1979-ம் ஆண்டு என முதல் இரு உலகக் கோப்பையையும் வென்ற மேற்கு இந்தியத் தீவுகள் அணி ‘ஹாட்ரிக்’ பட்டம் வெல்லும் முனைப்பில் இங்கிலாந்து மண்ணில் காலடிவைத்தது. இந்தத் தொடரில் வழக்கம் போன்று 8 அணிகள் பங்கேற்றன. இம்முறை இலங்கை அணி முழு நேர உறுப்பினர் அந்தஸ்துடன் களம் கண்டது. அதேவேளையில் கடந்த முறை விளையாடிய கனடா அணிக்கு பதிலாக ஜிம்பாப்வே அறிமுக அணியாக இடம் பெற்றது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்