Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

கவுன்ட்டி கிரிக்கெட் களேபரம்: சசெக்ஸ் அணி கேப்டன் புஜாரா உள்பட 4 வீரர்கள் சஸ்பெண்ட்!

கடந்த வாரம் லெய்செஸ்டர்ஷைர் அணிக்கு எதிராக சசெக்ஸ் அணி ஆடிய இங்கிலிஷ் கவுன்ட்டி கிரிக்கெட்டில் வீரர்களுக்குள்ளே தள்ளுமுள்ளும், துடுக்குத்தனமான பேச்சும், நடுவர்களிடம் அளவுக்கதிகமாக முறையீடு செய்ததும் நடந்தது. இதன் மீது விசாரணை மேற்கொண்ட இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தற்போது சசெக்ஸ் அணியின் கேப்டன் புஜாரா உள்பட 4 வீரர்களை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து டிவிஷன் 1-க்கு முன்னேறும் வாய்ப்பு சசெக்ஸ் அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இதோடு மட்டுமல்லாமல் மோசமான நடத்தைக் காரணமாக 12 புள்ளிகளையும் பறிகொடுத்தது சசெக்ஸ். கேப்டன் புஜாரா, அதிக விக்கெட்களை வீழ்த்திய ஆரி கர்வேலஸ், இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு ஆடும் இரண்டு சூரப்புலி வீரர்களான டாம் ஹெய்ன்ஸ், ஜாக் கார்சன் ஆகியோர் மீது இந்த சீசன் முழுவதும் பல்வேறு நடத்தை தொடர்பான குற்றச்சாட்டுகள் எழுந்தது. குறிப்பாக லெய்செஸ்டர்ஷைர் அணிக்கு எதிரான போட்டியில் மோசமாக நடந்து கொண்டதாலும், கேப்டன் புஜாரா தனது அணி வீரர்களைக் கட்டுப்படுத்தத் தவறியதாலும் ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்