Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

“ஒருநாள் கிரிக்கெட்டில் கே.எல்.ராகுலின் கம்பேக் இன்னிங்ஸ் மகிழ்ச்சி தருகிறது” - விராட் கோலி

கொழும்பு: ஒருநாள் கிரிக்கெட்டில் கே.எல்.ராகுல் கொடுத்துள்ள கம்பேக் இன்னிங்ஸ் மகிழ்ச்சி தருவதாக இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி தெரிவித்துள்ளார். ஆசிய கோப்பை தொடரின் சூப்பர்-4 சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆட்ட நாயகன் விருதை கோலி வென்றார்.

இலங்கையின் கொழும்பில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட் செய்து 50 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 356 ரன்கள் எடுத்தது. 357 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணி 128 ரன்களில் சுருண்டது. இதன் மூலம் 228 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ராகுல் மற்றும் கோலி இணைந்து 233 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இருவரும் அடுத்தடுத்து சதம் பதிவு செய்திருந்தனர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்