Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ஆசியக் கோப்பை கிரிக்கெட் | இந்தியா - நேபாளம் இன்று மோதல்: மழையின் அச்சுறுத்தலில் போட்டி

பல்லகெலே: ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் இன்று பலம்வாய்ந்த இந்திய அணியுடன், நேபாள அணி மோதவுள்ளது. பல்லகெலே நகரில் இன்று மழைப்பொழிவு இருக்கும் என்பதால் போட்டி முழுமையாக நடைபெறுமா என்ற அச்சம் எழுந்துள்ளது.

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான், இலங்கை நாடுகளில் நடைபெற்று வருகிறது. போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் அணிகள் ஏ பிரிவிலும், வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் பி பிரிவிலும் இடம்பெற்றுள்ளன. இந்தத் தொடரில் அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியான இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் முதலில் விளையாடிய இந்திய அணி 48.5 ஓவர்களில் 266 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து பாகிஸ்தான் தனது இன்னிங்ஸை தொடங்குவதற்கு முன்னர் தொடர்ந்து மழை பெய்ததன் காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி பகிர்ந்து அளிக்கப்பட்டது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்