Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

கோலிக்கு பதிலாக ஆட்ட நாயகன் விருதை குல்தீப் யாதவுக்குக் கொடுத்திருக்கலாம்: கவுதம் கம்பீர்

சஞ்சய் மஞ்சுரேக்கர், ஹர்ஷா போக்லே சர்ச்சையாக பேசினால் அவர்களை ஒதுக்கி வைக்கும் பிசிசிஐ இப்போது கவுதம் கம்பீர் சமீப காலங்களாக பிதற்றி வரும் சர்ச்சைக் கருத்துகளுக்கு எந்த ஒரு எதிர்வினையும் ஆற்றாமல் மவுனம் காப்பது, அவர் கருத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாகத்தான் பொருள்படும். நேற்று ஆசியக் கோப்பை போட்டியில் விராட் கோலி பாகிஸ்தான் பந்து வீச்சைப் புரட்டி எடுத்ததோடு விக்கெட்டுகளுக்கு இடையில் கடுமையாக ஓடி உழைத்து எடுத்த சதத்துக்காகவும், நேற்று அவர் முறியடித்த சாதனைகளுக்காகவும் ஆட்ட நாயகன் விருது கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் கவுதம் கம்பீர் குல்தீப் யாதவுக்குத்தான் கொடுத்திருக்க வேண்டும் என்று வாதிடுகிறார்.

மழையால் பாதிக்கப்பட்டு 2ம் நாள் தொடர்ந்த ஒரு நாள் போட்டியில் நேற்று கே.எல்.ராகுலையும் விராட் கோலியையும் பாகிஸ்தானால் பிரிக்க முடியவில்லை. இருவரும் சேர்ந்து சதம் எடுத்ததோடு 25.5 ஓவர்களில் 209 ரன்களை விளாசித்தள்ளியது, கிட்டத்தட்ட ஓவருக்கு 8 ரன்கள் பக்கம் பின்னி எடுத்தனர். இந்திய அணியின் டாப் 4 வீரர்கள் அரைசதம் எடுத்தால் ஸ்கோர் எங்கு போய் நிற்கும் என்பதுதான் நேற்றைய மெசேஜ் ஆகும். இன்றைய கிரிக்கெட் உலகின் மிக அபாயகரமான டாப் 4 என்றால் அது இந்திய அணியின் டாப் 4 தான். கோலி 60 ரன்களில் இருந்தபோது கொடுத்த கேட்சை நசீம் ஷா தவறாக கணிக்காமல் இருந்திருந்தால் நேற்று கோலியின் தாக்குதல்களிலிருந்து பாகிஸ்தான் தப்பித்திருக்கலாம். ஆனால் விதி யாரைவிட்டது? விராட் கோலி தன் 2-வது அரைசதத்தை 29 பந்துகளில் விளாசினார். மேலும் பினிஷிங்கில் 4, 4, 6 என்று முடித்தார் விராட் கோலி.


கருத்துரையிடுக

0 கருத்துகள்