Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ODI WC 2023 | பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியா வர விசா வழங்கப்பட்டது!

சென்னை: பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இந்தியா வர விசா வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த அணி இந்தியாவில் நடைபெற உள்ள உலகக் கோப்பை தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது. வரும் புதன்கிழமை (செப்.27) மாலை பாகிஸ்தான் அணி, துபாயில் இருந்து ஹைதராபாத் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘உலகக் கோப்பை கிரிக்கெட்-2023’ தொடர் அக்டோபர் 5-ம் தேதி முதல் நவம்பர் 19-ம் தேதி வரை இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் நடைபெறவுள்ளது. தொடரை இந்தியா நடத்துகிறது. மொத்தம் 48 போட்டிகள். தொடரில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை, தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன. இந்த நிலையில் பரிசுத் தொகை குறித்த அறிவிப்பை ஐசிசி வெளியிட்டுள்ளது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்