Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ODI WC 2023 | “டிக்கெட் வெளியிடுகிறோம் என்ற பெயரில் மற்றொரு கண்துடைப்பு இது” - வெங்கடேஷ் பிரசாத்

இந்தியாவில் அடுத்த மாதம் தொடங்க உள்ள ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான போட்டிகளுக்கான டிக்கெட்களில் சுமார் 4 லட்சம் டிக்கெட்களை நேற்று (செப்.8) வெளியிட்டது பிசிசிஐ. இந்நிலையில், டிக்கெட் விற்பனை முறை குறித்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத் விமர்சித்துள்ளார்.

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 5-ம் தேதி இந்தியாவில் தொடங்குகிறது. நவம்பர் 19-ம் தேதி வரை 10 நகரங்களில் நடைபெற உள்ள இந்தத் தொடரில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, போட்டியை நடத்தும் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை, தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன.


கருத்துரையிடுக

0 கருத்துகள்