Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

“லக்னோவில் 230 ரன்களை டிஃபென்ட் செய்ய முடியும் என்பதை அறிவோம்” - குல்தீப் யாதவ்

லக்னோ: நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணியை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளது இந்திய அணி. இந்நிலையில், இந்தப் போட்டி குறித்து இந்திய வீரர் குல்தீப் யாதவ் தெரிவித்தது.

“சொந்த ஊரில் விளையாடுவது சிறந்த அனுபவம். ஆடுகளம் சுழலுக்கு ஒத்துழைத்தது. அதே நேரத்தில் பனிப்பொழிவும் இருந்தது. பந்தை சரியான லெந்தில் வீச முயற்சித்தோம். நான் சிறப்பாகவே செயல்பட்டேன். அதைவிட அணி வெற்றி பெற்றது மகிழ்ச்சி. இந்த ஆடுகளத்தில் 230 ரன்கள் என்ற இலக்கை டிஃபென்ட் செய்ய முடியும் என்பது எங்களுக்கு தெரியும். கேப்டன் ரோகித் அபாரமாக பேட் செய்திருந்தார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்