Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஷுப்மன் கில் குணமாக மேலும் ஒருவாரம் ஆகும்

சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரரான ஷுப்மன் கில் கடந்த வாரம் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதனால் அவர், உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற லீக் ஆட்டத்தில் களமிறங்கவில்லை. ஓட்டலில் தங்கியபடி ஷுப்மன் கில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஷுப்மன் கில்லின் இரத்த அணுக்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் குறைவாக இருந்தால் அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பிசிசிஐ மருத்துவக்குழுவினர் தெரிவித்தனர். காவிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், நேற்று முன்தினம் மாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


கருத்துரையிடுக

0 கருத்துகள்