Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

“நடு ஓவர்களில் சிறப்பாக செயல்படுவது அவசியம்” - ராகுல் திராவிட்

சென்னை: உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுடன் நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகிறது. இந்நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் திராவிட் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஒருநாள் கிரிக்கெட் போட்டியை பொறுத்தவரையில் தற்போதைய சூழ்நிலைகளில் எவ்வளவு ரன்கள் குவித்தால் வெற்றி பெற முடியும் என்பதை அறுதியிட்டு கூறமுடியாது. உலகக் கோப்பை தொடர் என்பதால் வெவ்வேறு நகரங்களில், வெவ்வேறு ஆடுகளங்களில் விளையாடுகிறோம். சிவப்பு மண், கருப்பு மண் ஆடுகளங்கள் உள்ளன. ஒவ்வொரு ஆடுகளமும் தனித்துவமாக இருக்கும். மேலும் அளவிலும் மாறுபடும். டெல்லி, பெங்களூருவை விட சென்னை ஆடுகளம் அளவில் பெரியது. இதனால் உலகக் கோப்பை தொடரை பொறுத்தவரையில் மைதானத்தின் சூழ்நிலை, ஆட்டத்தின் சூழ்நிலை ஆகியவற்றை எவ்வாறு தகவமைத்துக் கொண்டு விளையாடுகிறோம் என்பதில்தான் அனைத்தும் இருக்கிறது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்