Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

“கம்பீர், சேவாக், யுவராஜுக்கு கிடைக்காத வாய்ப்பு” - இந்திய அணி கேப்டன்சி குறித்து ரோகித் சர்மா

டெல்லி: "எல்லா நேரமும் ஒருவர் விரும்புவது கிடைப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்று" என இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நாளை (5-ம் தேதி) முதல் நவம்பர் 19-ம் தேதி வரை இந்தியாவில் நடைபெறுகிறது. வரும் 5ம் தேதி சென்னையில் நடக்கும் தனது முதல் ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்திய அணி 2013ல் கைப்பற்றிய சாம்பியன்ஸ் டிராபியே கடைசியாக வென்ற ஐசிசி கோப்பை. கிட்டத்தட்ட ஒரு தசாப்தம் கழித்து ஐசிசி கோப்பையை வெல்லும் முனைப்பில் இந்திய அணி சொந்த மண்ணில் விளையாட உள்ளது. தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகிய நிலையில், அதன்பிறகு விராட் கோலி அணியின் கேப்டனாக இருந்தார். கடந்த ஆண்டு ரோகித் சர்மா கேப்டன் பொறுப்பை ஏற்றார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்