Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ODI WC 2023 | ஒரே போட்டியில் மூவர் சதம்: இலங்கையை பந்தாடிய தென்னாப்பிரிக்கா 428 ரன்கள் விளாசி சாதனை!

டெல்லி: நடப்பு உலகக் கோப்பை தொடரின் 4-வது போட்டியில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணி 5 விக்கெட்டுகளை இழந்து 428 ரன்களை குவித்துள்ளது. இதில் குயின்டன் டி காக், ஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ராம், சதமடித்து அசத்தினர். இதன்மூலம் ஒரே போட்டியில் மூன்று சதமடித்த அணி மற்றும் உலகக் கோப்பை வரலாற்றில் அதிகபட்ச ரன்கள் குவித்தது என வரலாற்று சாதனைகளை படைத்துள்ளது தென்னாப்பிரிக்கா.

டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி தென்னாப்பிரிக்காவ்வின் இன்னிங்க்ஸை குயின்டன் டி காக், தெம்பா பவுமா இணை தொடங்கியது. இதில் தில்ஷான் மதுஷங்கா வீசிய இரண்டாவது ஓவரில் தெம்பா பவுமா 8 ரன்களில் விக்கெட்டானார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்