Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

இலங்கையுடன் வான்கடே மைதானத்தில் இன்று பலப்பரீட்சை: 7-வது வெற்றியை எதிர்நோக்கும் இந்திய அணி

மும்பை: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இன்று பிற்பகல் 2 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் மோதுகின்றன. இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் அரை இறுதிக்கு முன்னேறுவதை உறுதி செய்துவிடும்.

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இதுவரை விளையாடிஉள்ள 6 லீக் ஆட்டங்களிலும் வெற்றிகளை குவித்து 12 புள்ளிகளுடன் பட்டியிலில் 2-வது இடத்தில் உள்ளது. வீழ்த்த முடியாத அணியாக வலம் வரும் இந்திய அணி குறிப்பிட்டத்தக்க போராட்ட குணங்களை வெளிப்படுத்தி சாம்பியன் அணிக்கு உண்டான பண்புகளையும் வெளிப்படுத்தி உள்ளது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்