Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

“நல்ல வேளை நான் பவுலர் இல்லை” - ரோகித், கோலியை போற்றும் நெதர்லாந்து பேட்ஸ்மேன்

பெங்களூரு: நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 45-வது போட்டியில் இந்தியா மற்றும் நெதர்லாந்து கிரிக்கெட் அணிகள் விளையாடுகின்றன. இந்தப் போட்டி இன்று பெங்களூருவில் நடைபெற உள்ளது. இந்த சூழலில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் மற்றும் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலியை புகழ்ந்து பேசியுள்ளார் நெதர்லாந்து பேட்ஸ்மேன் மேக்ஸ் ஓ'டவுட்.

“ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி என இருவரும் உலகின் தலைசிறந்த வீரர்கள். அவர்கள் இருவரும் தங்கள் ஆட்டத்தால் எதிரணியை அச்சுறுத்தும் திறன் கொண்டவர்கள். நல்ல வேளையாக அவர்களுக்கு பந்து வீசும் பவுலராக நான் இல்லாமல் போனேன். இருந்தாலும் நாங்கள் அவர்களை விரைந்து வெளியேற்றுவோம் என நம்புகிறேன்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்