Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

“தைரியமானவர்களுக்கு அதிர்ஷ்டம் சாதகமாக இருக்கும்” - ரோஹித் சர்மா

மும்பை: உலகக் கோப்பை தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் இந்திய அணி இன்று நியூஸிலாந்துடன் பலப்பரீட்சை நடத்துகிறது. இதையொட்டி நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறியதாவது:

அதிர்ஷ்டம் சாதகமாக இருக்கும் நேரம் வந்துவிட்டது, தைரியமானவர்களுக்கு அதிர்ஷ்டம் சாதகமாக இருக்கும். லீக் சுற்றில் நாங்கள் செய்ததை அப்படியே தொடர வேண்டும்.அதை தவிர்த்து வேறு எதையும் செய்ய வேண்டும்என்று நான் நினைக்கவில்லை. உலகக் கோப்பையில் லீக் ஆட்டமாக இருந்தாலும் அல்லது அரை இறுதியாக இருந்தாலும் எப்போதும் அழுத்தம் இருக்கும். நாங்கள் முதல் ஆட்டத்தில் இருந்து கடைசி ஆட்டம் வரை அழுத்தத்தை சிறப்பாக கையாண்டோம். இதற்கு அணி சரியாக பதில் அளித்துள்ளது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்