Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

சையது மோடி சர்வதேச பாட்மிண்டன் தொடர்: முதல் சுற்றில் ஸ்ரீகாந்த் தோல்வி

லக்னோ: சையது மோடி சர்வதேச பாட்மிண்டன் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் முதல் சுற்றில் தோல்வி அடைந்தார்.

லக்னோவில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் உலகத் தரவரிசையில் 24-வது இடத்தில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், 36-வது இடத்தில் உள்ள சீன தைபேவின் சியா ஹாவ் லீயுடன் மோதினார். 38 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஸ்ரீகாந்த் 21-23, 8-21 என்ற நேர் செட்டில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார். மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் சமீர் வர்மா 9-21, 21-7, 17-21 என்ற செட் கணக்கில் சீன தைபேவின் வாங் சூ வெயிடம் தோல்வி அடைந்தார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்