Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ODI WC Final | ‘வித்தியாசமாக செய்ய வேண்டியது இல்லை’: ரவி சாஸ்திரி

சென்னை: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் நாளை அகமதாபாத்தில் மோதுகின்றன. இந்நிலையில் இந்த ஆட்டத்தில் இந்திய அணி வித்தியாசமாக எதையும் செய்ய வேண்டியது இல்லை என முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது: இந்திய அணி வீரர்கள் ரிலாக்ஸாகவே இருப்பார்கள் என நினைக்கிறேன். அவர்கள், சொந்த மண்ணில் இறுதிப் போட்டியில் விளையாடுகிறார்கள். மிகவும் அனுபவம் வாய்ந்த அணி. இதனால் அவர்கள், வித்தியாசமாக எதையும் செய்ய வேண்டியது இல்லை. இதுவரை விளையாடியது போன்றே செயல்பட்டால் போதுமானது. இந்திய அணி உலகக் கோப்பையை வெல்லும். களத்தில் நிதானமாகவும், அமைதியாகவும் செயல்பட வேண்டும். அழுத்தத்தை கையாண்டு உள்வாங்கிக் கொள்ள வேண்டும்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்