Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

2011 உலகக் கோப்பை வெற்றியின்போது யுவராஜ் சிங்குக்கு போதுமான பாராட்டுகள் கிடைக்கவில்லை: கவுதம் கம்பீர் வருத்தம்

புதுடெல்லி: 2011-ம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை வெற்றியின்போது மிகச் சிறப்பாக விளையாடிய யுவராஜ் சிங்குக்கு போதுமான பாராட்டுகள் கிடைக்கவில்லை என்று இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரரும், பாஜக எம்பியுமான கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

கபில் தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 1983-ம் ஆண்டு முதல் முறையாக ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பையை கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து 28 ஆண்டுகளுக்குப் பின்னர் எம்.எஸ்.தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 2011-ல் உலகக் கோப்பையை வென்றது. இந்தியாவில் நடைபெற்ற இப்போட்டியின் இறுதி ஆட்டத்தில் இலங்கையை வீழ்த்தி, இந்திய அணி பட்டம் வென்றது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்