Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார் தென் ஆப்பிரிக்காவின் டீன் எல்கர்

டர்பன்: சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் டீன் எல்கர். இந்தியாவுடனான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரே தான் பங்கேற்று விளையாடும் கடைசி தொடர் என தெரிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது இந்திய கிரிக்கெட் அணி. டி20, ஒருநாள் கிரிக்கெட் தொடர்கள் முடிந்த நிலையில் வரும் 26-ம் தேதி தொடங்கும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் விளையாட உள்ளன. முதல் போட்டி சென்சூரியன் நகரிலும், இரண்டாவது போட்டி கேப்டவுன் நகரிலும் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள தென் ஆப்பிரிக்க டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எல்கர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்