Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

“ஒட்டுமொத்த தேசமும் ஏமாற்றமடைந்தது” - உலகக் கோப்பை தோல்வி குறித்து ஷமி

மொராதாபாத்: உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியை தழுவியபோது ஒட்டுமொத்த தேசமும் ஏமாற்றமடைந்தது என இந்திய கிரிக்கெட் அணியின் பவுலர் மொகமது ஷமி தெரிவித்துள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் கடந்த அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெற்றது. இதில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடின. அதில் சாம்பியன் பட்டம் வென்றது ஆஸ்திரேலியா. இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்லாது பல்வேறு நாடுகளை சேர்ந்த கிரிக்கெட் ரசிகர்கள் இந்திய அணி கோப்பையை வெல்லும் என எதிர்பார்த்தனர். ஆனால், ஏமாற்றமே மிஞ்சியது. இந்நிலையில், மொராதாபாத் நகரில் பத்திரிகையாளர்களை ஷமி சந்தித்தார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்