Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

மத்திய அரசு விருதுகளை திருப்பி அளித்தார் வினேஷ் போகத்

புதுடெல்லி: இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (டபிள்யூஎஃப்ஐ) தலைவராக பிரிஜ் பூஷண் சரண் சிங்கின் ஆதரவாளர் சஞ்சய் சிங் தேர்வு செய்யப்பட்டதைக் கண்டித்து, மத்திய அரசு தனக்கு அளித்தகேல் ரத்னா, அர்ஜுனா விருதுகளை வீராங்கனை வினேஷ் போகத்திருப்பியளித்தார். இந்த விருதுகளை பிரதமர் அலுவலகத்தில் ஒப்படைப்பதற்காக சென்றபோது போலீஸார் அவரைத் தடுத்தனர். இதையடுத்து டெல்லி கடமைப் பாதையிலேயே விருதுகளை வைத்து விட்டு அவர் திரும்பினார்.

மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக பாஜக எம்.பியும், மல்யுத்த சம்மேளனத்தின் தலைவருமான பிரிஜ் பூஷண் மீது குற்றச்சாட்டு எழுந்தது. மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தொடர் போராட்டம் நடத்தியதையடுத்து அவர் பதவி விலகினார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில் பிரிஜ் பூஷணின் ஆதரவாளர் சஞ்சய் சிங் மல்யுத்த சம்மேளனத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். இதற்கு மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்