Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

SA vs IND | “ஒரு பவுலரை மட்டும் சார்ந்திருக்க முடியாது” - டெஸ்ட் தோல்வி குறித்து ரோகித் சர்மா

செஞ்சுரியன்: “ஒரேயொரு பந்து வீச்சாளரை மட்டும் சார்ந்திருக்க முடியாது; மற்ற பந்து வீச்சாளர்களும் தங்கள் பங்கை செய்ய வேண்டும்” என்று தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தோல்விக்கு பின் இந்திய கேப்டன் ரோகித் சர்மா பேசியுள்ளார்.

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் தோல்வியை தழுவியுள்ளது. செஞ்சுரியன் கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் டாஸை இழந்து முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 245 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 408 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. டீன் எல்கர் 185 ரன்கள் விளாசினார். மார்கோ யான்சன் 84 ரன்கள் எடுத்தார். இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக 4 விக்கெட்களை கைப்பற்றி இருந்தார் பும்ரா.


கருத்துரையிடுக

0 கருத்துகள்