Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

“உண்மையான திறமைக்கு எல்லைகள் இல்லை” - போபண்ணாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்து

புதுடெல்லி: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற ரோஹன் போபண்ணாவுக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது: மீண்டும் ஒருமுறை, வயது தடையல்ல என்பதை அபார திறமை கொண்ட ரோஹன் போபண்ணா காட்டியுள்ளார். வரலாற்று சிறப்புமிக்க ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் வெற்றிபெற்ற அவருக்கு வாழ்த்துகள். எப்பொழுதும் தன்னம்பிக்கை, கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியே நமது திறமைகளை வரையறுக்கிறது என்பதற்கு அவரது சிறப்புமிக்க பயணம் ஒரு அழகான நினைவூட்டல். அவரது எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்” இவ்வாறு பிரதமர் கூறியுள்ளார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்