Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ராஞ்சி டெஸ்ட் | துருவ் ஜூரெல் சிறப்பான ஆட்டம் - இந்தியா 307 ரன்களுக்கு ஆல் அவுட்

ராஞ்சி: ராஞ்சி டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 307 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது. 2-ம் நாள் முடிவில் இங்கிலாந்தின் அட்டகாசமான பந்து வீச்சினால் ஆட்ட முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 219 ரன்கள் எடுத்திருந்தது இந்திய அணி.

விக்கெட் கீப்பர் துருவ் ஜூரெல் 2 பவுண்டரி ஒரு சிக்சருடன் 30 ரன்களுடனும், குல்திப் யாதவ் 17 ரன்களுடனும் 3ம் நாள் ஆட்டத்தை இன்று (ஞாயிறு) தொடங்கினர். இருவரும் விக்கெட் விழாத வண்ணம் நிதானமாக விளையாடினர். இங்கிலாந்தின் பந்துவீச்சு தாக்குதலை திறம்பட கையாண்டனர். துருவ் ஜூரெல் அரைசதம் கடந்தார். குல்திப் யாதவ் 131 பந்துகளைச் சந்தித்து 2 பவுண்டரிகளுடன் 28 ரன்கள் எடுத்து ஜூரெலுக்கு பக்கபலமாக இருந்தார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்