Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

விசாகப்பட்டினம் டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற 399 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி

விசாகப்பட்டினம்: இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா 255 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. ஷுப்மன் கில் அபாரமாக விளையாடி சதம் விளாசினார். இதையடுத்து இங்கிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக 399 ரன்களை நிர்ணயித்துள்ளது இந்திய அணி.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் 2-வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 396 ரன்கள் குவித்தது. பின்னர்முதல் இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணி 253 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்