Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: இந்திய அணிகள் அதிர்ச்சி தோல்வி

பூசான்: உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய ஆடவர்,மகளிர் அணியினர் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் அதிர்ச்சி தோல்வி அடைந்தனர். தென் கொரியாவின் பூசான் நகரில் நடைபெற்று வரும் இந்தத்தொடரில் நாக் அவுட் சுற்றில் இந்திய ஆடவர் அணி, கஜகஸ்தானுடன் மோதியது. இதில் இந்தியஆடவர் அணி 3-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது.

தொடர்ந்து நடைபெற்ற கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியஆடவர் அணி பலம் வாய்ந்த தென் கொரியாவுடன் மோதியது. இதில் இந்திய ஆடவர் அணி 0-3 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. ஹர்மீத் தேசாய் 10-12, 11-13, 7-11என்ற செட் கணக்கில் ஜங் வூஜினிடமும், சரத் கமல் 9-11, 5-11, 11-8,4-11 என்ற கணக்கில் லிம் ஜாங்ஹூனிடமும், ஜி.சத்தியன் 5-11, 8-11, 2-11 என்ற கணக்கில் லீ சங் சுவிடமும் தோல்வி அடைந்தனர். இதன் மூலம் இந்திய அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. இந்திய மகளிர் அணி தனது நாக் அவுட் சுற்றில் இத்தாலியுடன் மோதியது. இதில் இந்திய மகளிர் அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்