Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

சர்பராஸ் கான் அறிமுக நிகழ்வில் கலந்துகொண்ட தந்தை - பின்னணியில் சூர்யகுமார் யாதவ்

ராஜகோட்: அனில் கும்ப்ளேவிடம் இருந்து டெஸ்ட் தொப்பியை சர்ப்ராஸ் கான் பெற்ற நிகழ்வில் தான் கலந்து கொண்டதற்கு சூர்யகுமார் யாதவ்தான் காரணம் என்று சர்ப்ராஸ் கானின் தந்தை நவுஷத் கான் தெரிவித்துள்ளார். இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் அறிமுக வீரராக இங்கிலாந்து அணிக்கு எதிரான ராஜ்கோட் போட்டியில் சர்பராஸ் கான் களம் கண்டுள்ளார். முதல் சர்வதேச டெஸ்ட் இன்னிங்ஸில் அரை சதம் பதிவு செய்து அசத்தியிருந்தார்.

இந்திய டெஸ்ட் அணியின் 311-வது வீரராக சர்பராஸ் கான் அறிமுகம் ஆகியுள்ளார். டெஸ்ட் அணிக்கான ‘கேப்’-பை பெற்றதும் அதை தனது தந்தையின் கைகளில் கொடுத்து நெகிழ செய்தார். தொடர்ந்து மகனை ஆரத் தழுவிக் கொண்டார் சர்பராஸ் கானின் தந்தை நவுஷத் கான். ‘இந்திய அணிக்காக நான் விளையாடுவதை அப்பா பார்க்க வேண்டுமென விரும்பினேன். அந்த வகையில் எனது கனவு பலித்தது’ என அரை சதம் விளாசிய பிறகு சர்பராஸ் தெரிவித்திருந்தார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்