Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

கடைசி விக்கெட்டுக்கு தேஷ்பாண்டே, தனுஷ் கோட்டியன் சதம் விளாசி அசத்தல்: அரை இறுதிக்கு முன்னேறியது மும்பை

மும்பை: கோப்பை கிரிக்கெட் தொடரில் மும்பை-பரோடா அணிகள் இடையிலான கால் இறுதி ஆட்டம் மும்பையில் உள்ள பிகேசி மைதானத்தில் நடைபெற்றது. இதன் முதல் இன்னிங்ஸில் மும்பை அணி 140.4 ஓவர்களில் 384 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அதேவேளையில் பரோடா தனது முதல் இன்னிங்ஸில் 110.3 ஓவர்களில் 348 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

36 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய மும்பை அணி 4-வது நாள் ஆட்டத்தின் முடிபில் 102 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 379 ரன்கள் குவித்தது. தொடக்க வீரரான ஹர்திக் தாமோர் 114 ரன்களும், பிரித்வி ஷா 87, ஷம்ஸ் முலானி 54 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர். சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான தனுஷ் கோட்டியன் 32, வேகப்பந்து வீச்சாளரான துஷார் தேஷ்பாண்டே 23 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்