Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

“ஜெய் ஸ்ரீராம் என சொல்வதிலோ, அல்லாஹு அக்பர் என சொல்வதிலோ எந்த வித்தியாசமும் இல்லை” - முகமது ஷமி

புதுடெல்லி: "ஜெய் ஸ்ரீராம் என்று சொல்வதிலோ, அல்லாஹு அக்பர் என்று சொல்வதிலோ எந்த தீங்கும் இல்லை. ஏனெனில் இதில் எந்த வித்தியாசமும் இல்லை. ஆயிரம் முறை சொல்லட்டும்" என்று இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி தெரிவித்துள்ளார்.

ஷமி தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் முழங்கால் காயம் காரணமாக விளையாடவில்லை. ஒருநாள் உலகக் கோப்பையில் இலங்கைக்கு எதிரான போட்டியில் விக்கெட்டை வீழ்த்திய பிறகு ஷமி களைப்பினால் முழந்தாளிட்டார், உடனே அவர் சஜ்தா செய்ததாக சமூக ஊடகங்களில் புகைப்படத்துடன் பரப்பப்பட்டது. ஆனால் தான் சஜ்தா செய்யவில்லை என்று அப்போது கூறிய ஷமி , சஜ்தா என்று கூறியவர்கள் மீது கடுமையான கருத்துக்களையும் தெரிவித்தது சர்ச்சைக்குள்ளானது.

“எப்படி சஜ்தா விவகாரம் வந்தது? ராமர் கோயில் கட்டப்படும் போது ஜெய் ஸ்ரீராம் என்று சொன்னால் என்ன பிரச்சினை? ஆயிரம் முறை சொல்லட்டும். நான் அல்லாஹு அக்பர் என்று சொல்ல விரும்பினால் ஆயிரம் முறை சொல்வேன்” என முகமது ஷமி தெரிவித்துள்ளார். உலகக்கோப்பை போட்டியின் போது அகமதாபாத்தில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஜெய் ஸ்ரீராம் கோஷம் எழுந்ததாக சர்ச்சை கிளம்பியது நினைவிருக்கலாம். அது தொடர்பாகத்தான் தற்போது ஷமி இவ்வாறு கூறியுள்ளார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்