Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

மாரத்தான் வீரர் கிப்டமின் இறுதிப் பயணம்: கென்ய மக்கள் பிரியாவிடை

நைரோபி: மாரத்தான் ஓட்டத்தில் உலக சாதனை படைத்த கென்ய நாட்டு வீரர் கெல்வின் கிப்டம், கடந்த 11-ம் தேதி கார் விபத்தில் உயிரிழந்தார். அவரது உடல் வெள்ளிக்கிழமை அன்று அடக்கம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், அவரது இறுதி ஊர்வலத்தில் திரளான கென்ய மக்கள் திரண்டு பிரியாவிடை அளித்தனர்.

24 வயதான அவருடன் இந்த கார் விபத்தில் அவரது பயிற்சியாளரும் உயிரிழந்தார். இந்த சூழலில் அவரது சொந்த கிராமமான செப்சாமோ கிராமத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது. அதை முன்னிட்டு வியாழக்கிழமை அன்று எல்டோரெட் நகரில் இருந்து செப்சாமோ கிராமத்துக்கு சாலை மார்க்கமாக சுமார் 80 கிலோ மீட்டர் அவரது உடல் கொண்டு செல்லப்படுகிறது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்