Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் | கர்நாடகா அணிக்கு திரும்பினார் மயங்க் அகர்வால்

பெங்களூரு: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் ‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ள கர்நாடகா தனது அடுத்த ஆட்டத்தில் வரும் 9-ம் தேதி தமிழகத்துடன் மோதுகிறது. இந்த ஆட்டம் சென்னையில் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த போட்டிக்கான கர்நாடகா அணியை அம்மாநில கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. இதில் சமீபத்தில் விமான பயணத்தின் போது உடல் நலன் பாதிக்கப்பட்டு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட கேப்டன் மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்டுள்ளார்.

32 வயதான மயங்க் அகர்வால், நடப்பு ரஞ்சி கோப்பை தொடரில் திரிபுரா அணிக்கு எதிரான ஆட்டம் முடிவடைந்ததும் சூரத் செல்லும் விமானத்தில் பயணித்தார். அப்போது அவர், தவறுதலாக அருந்திய திரவத்தால் வாய் மற்றும் தொண்டை பகுதியில் காயம் ஏற்பட்டது. தொடர்ந்து மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினார். இதனால் அவர், ரயில்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் பங்கேற்க முடியாமல் போனது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்