Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

‘கோடிங் கற்க வேண்டிய அவசியமில்லை’ - ஏஐ காரணம் அடுக்கும் என்விடியா சிஇஓ

கலிபோர்னியா: ஏஐ இருப்பதால் யாரும் கோடிங் கற்க வேண்டியதில்லை என என்விடியா தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) ஜென்சென் ஹுவாங் தெரிவித்துள்ளார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் துணையினால் யார் வேண்டுமானாலும் புரோகிராமர் ஆகலாம் என தெரிவித்துள்ளார்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்த செமி கண்டக்டர் சிப் தயாரிப்பில் உலகின் முதல் நிலை நாடாக திகழ்கிறது என்விடியா. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் பன்னாட்டு நிறுவனம். ஆட்டோமேட்டிவ் மற்றும் மொபைல் கம்யூட்டிங் சார்ந்து சிப் உருவாக்கி வரும் பணியையும் மேற்கொண்டு வருகிறது. அண்மையில் அந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு ஒரே நாளில் 277 பில்லியன் டாலர் அதிகரித்தது. இது, இந்திய மதிப்பில் சுமார் ரூ.23 லட்சம் கோடி. இதன் மூலம் சந்தை மதிப்பில் உலகின் முதல் நிலை தொழில்நுட்ப நிறுவனமாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்