Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

IND vs ENG 3-வது டெஸ்ட் | 434 ரன்களில் இந்தியா வெற்றி: ஜெய்ஸ்வால், ஜடேஜா அபாரம்!

ராஜ்கோட்: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 434 ரன்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா, ஜடேஜா, சர்பராஸ் கான், துருவ் ஜுரல், சிராஜ், பும்ரா, குல்தீப் யாதவ், அஸ்வின், ஷுப்மன் கில் ஆகியோர் இந்திய அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.

ராஜ்கோட்டில் கடந்த 15-ம் தேதி இந்தப் போட்டி தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் இந்தியா 445 ரன்கள் மற்றும் இங்கிலாந்து 319 ரன்கள் எடுத்தன. 126 ரன்களுடன் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. ஜெய்ஸ்வால் மற்றும் கில் இணைந்து 159 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். முதுகு பகுதியில் ஏற்பட்ட தசை பிடிப்பு காரணமாக சதம் கடந்த நிலையில் ஜெய்ஸ்வால் வெளியேறினார். 3-ம் நாள் ஆட்டத்தை 2 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்து நிறைவு செய்தது இந்தியா.


கருத்துரையிடுக

0 கருத்துகள்