Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

T20 WC 2024 | ‘இந்திய அணியை கேப்டன் ரோகித் வழிநடத்துவார்’ - ஜெய் ஷா அறிவிப்பு

ராஜ்கோட்: எதிர்வரும் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இந்திய கிரிக்கெட் அணியை கேப்டன் ரோகித் சர்மா வழிநடத்துவார் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். ராஜ்கோட்டில் நடைபெற்ற நிகழ்வில் அவர் இதனை தெரிவித்தார்.

கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடருக்கு பிறகு மூன்றே மூன்று சர்வதேச டி20 போட்டிகளில் மட்டுமே ரோகித் சர்மா விளையாடி உள்ளார். அவருக்கு பதிலாக இந்திய டி20 அணியை ஹர்திக் பாண்டியா வழிநடத்தி வந்தார். அவர் விளையாடாத நேரங்களில் அணியை மாற்று வீரர்கள் வழிநடத்தினர். இந்நிலையில், அடுத்த சில மாதங்களில் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை தொடரில் ரோகித் பங்கேற்பது குறித்து டாக் ஒரு பக்கம் நிலவி வந்தது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்