Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

தரம்சாலாவில் இன்று கடைசி டெஸ்ட் தொடக்கம்: தொடரை 4-1 என வெல்லும் முனைப்பில் இந்தியா

தரம்சாலா: இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான கடைசி மற்றும் 5-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தரம்சாலாவில் இன்று தொடங்குகிறது. இரு அணிகள் இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.

இதன் பின்னர் விசாகப்பட்டினம், ராஜ்கோட், ராஞ்சி போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 3-1 என தன்வசப்படுத்தியது. இந்நிலையில் கடைசி டெஸ்ட் போட்டியில் இரு அணிகளும் தரம்சாலாவில் உள்ள இமாச்சல் பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் இன்று மோதுகின்றன. இந்த ஆட்டத்திலும் இந்திய அணி வெற்றியை வசப்படுத்தும் பட்சத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை தக்க வைத்துக் கொள்ளலாம்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்