Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

‘இது ஆர்சிபி அணியின் புதிய அத்தியாயம்’ - விராட் கோலி @ பெங்களூரு

பெங்களூரு: நடப்பு ஐபிஎல் சீசனில் நாளை மறுதினம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக சீசனின் தொடக்கப் போட்டியில் விளையாட உள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. இந்த சூழலில் அந்த அணியின் அன்பாக்ஸ் நிகழ்வில் கோலி உட்பட அணியின் அனைத்து வீரர்களும் பங்கேற்றனர். இதில் கோலி கன்னட மொழியில் பேசி அசத்தினார்.

கடந்த 16 சீசன்களாக ஐபிஎல் அரங்கில் சாம்பியன் பட்டம் வெல்ல முடியாத அணியாக ஆர்சிபி உள்ளது. இந்த முறை அந்த அணி கோப்பை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் முடிந்த மகளிர் பிரீமியர் லீக் தொடரில் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ஆர்சிபி அணி சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. இந்த அன்பாக்ஸ் நிகழ்வில் ஆர்சிபி அணியின் புதிய ஜெர்ஸி மற்றும் இந்த சீசனில் விளையாட உள்ள வீரர்கள் அனைவரும் இணைந்து குழு படம் எடுத்துக் கொண்டனர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்