Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியுடன் கோலாகலமாக தொடங்கியது ஐபிஎல்

சென்னை: ஐபிஎல் 17 சீசன் போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று கோலாகலமாக தொடங்கின.

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் 17-வது சீசன் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. தொடக்க நிகழ்வாக அந்தரத்தில் பறந்து வந்தபடி பாலிவுட் நடிகர் அக் ஷய் குமார் தேசிய கொடியுடன் மைதானத்துக்குள் நுழைந்தார். பின்னர் அந்த கொடியை மற்றொரு பாலிவுட் நடிகரான டைகர் ஷெராப் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து இருவரும் சில பாலிவுட் பாடல்களுக்கு நடனமாடினர். இதன் பின்னர் மைதானத்தில் பைக்கில் வலம் வந்தனர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்