Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

தரம்சாலா டெஸ்ட் | ரோகித், ஷுப்மன் கில் அடுத்தடுத்து சதம் விளாசல்: வலுவான நிலையில் இந்தியா

தரம்சாலா: இங்கிலாந்து அணிக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா சதம் அடித்து அசத்தியுள்ளார். நடப்பு தொடரில் ரோகித்தின் இரண்டாவது சதம் இது. இந்திய அணி தரப்பில் ஷுப்மன் கில்லும் இன்றைய போட்டியில் சதம் அடித்து அசத்தினார்.

தரம்சாலாவில் நேற்று தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் குல்தீப் யாதவ், அஸ்வின் ஆகியோரது அபாரமான பந்து வீச்சில் 218 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இங்கிலாந்து அணி 57.4 ஓவர்களை மட்டும் சந்தித்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஸாக் கிராவ்லி 108 பந்துகளில், ஒரு சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 79 ரன்கள் எடுத்தார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்