Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

மீண்டும் வருகிறது சாம்பியன்ஸ் லீக் டி20

மும்பை: சாம்பியன்ஸ் லீக் டி 20 கிரிக்கெட் தொடர் கடந்த 2009-10 முதல் 2014-15-ம் ஆண்டு வரை நடத்தப்பட்டது. இதில் இந்தியாவில் இருந்து 3 அணிகள், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்காவில் இருந்து தலா 2 அணிகள் மற்றும் பாகிஸ்தான், மேற்கு இந்தியத் தீவுகள், நியூஸிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒரு அணிகள் என மொத்தம் 10 அணிகள் பங்கேற்று விளையாடின.

கடைசியாக சாம்பியன்ஸ் லீக் டி 20 தொடர் 2014-ம் ஆண்டு நடத்தப்பட்டது. இந்நிலையில், இந்தத் தொடரை மீண்டும் நடத்துவது தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஆகியவை ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை ஆஸ்திரேலியாவில் உள்ள விக்டோரியா கிரிக்கெட் சங்கத்தின் தலைமைச் செயல் அதிகாரி நிக் கம்மின்ஸ் உறுதி செய்துள்ளார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்