Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

உலக கோப்பை வில்வித்தை போட்டி தென் கொரியாவை வீழ்த்தி தங்கம் வென்றது இந்திய ஆடவர் அணி

ஷாங்காய்: வில்வித்தை உலகக் கோப்பை நிலை 1 போட்டியில் ஆடவருக்கான ரீகர்வ் அணிகள் பிரிவில் ஒலிம்பிக் சாம்பியனான தென் கொரியாவை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது இந்திய அணி.

சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவருக்கான ரீகர்வ் அணிகள் பிரிவு இறுதிப் போட்டியில் தீரஜ் பொம்மதேவாரா, தருண்தீப் ராய், பிரவீன் ஜாதவ் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணியானது ஒலிம்பிக் சாம்பியனான தென் கொரிய அணியை எதிர்த்து விளையாடியது. இதில் இந்திய அணி 5-1என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றது. உலகக்கோப்பை தொடரில் ரீகர்வ் பிரிவில்இந்திய ஆடவர் அணி 14 வருடங்களுக்குப் பிறகு தற்போதுதான் தங்கப் பதக்கம் வென்றுள்ளது. கடைசியாக இந்திய அணி 2010-ம்ஆண்டு நடைபெற்ற தொடரில் தங்கம் வென்றிருந்தது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்