Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

‘போட்டியை முடித்துக் கொடுப்பதில் ஹெட்மயர் வல்லவர்’ - சஞ்சு சாம்சன் பெருமிதம்

முலான்பூர்: போட்டியை வெற்றிகரமாக முடித்துக் கொடுப்பதில் ஷிம்ரன் ஹெட்மயர் வல்லவராகத் திகழ்கிறார் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்தார்.

பஞ்சாப் மாநிலம் முலான்பூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தியது. முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்தது. ஜிதேஷ் சர்மா 29, லிவிங்ஸ்டன் 21, அசுதோஷ் சர்மா 21 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் பஞ்சாப் அணியால் குறைவான ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்