Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

தொடக்கத்திலேயே சிக்கலை உருவாக்கி விட்டோம்: மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா

ஜெய்ப்பூர்: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

180 ரன்கள் இலக்கை துரத்திய இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 18.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 183 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 60 பந்துகளில், 7 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 104 ரன்கள் விளாசி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்