Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

வாக்குச்சாவடியில் வரிசையில் நிற்பவரின் எண்ணிக்கை விவரத்தை இணையவெளியில் அறியலாம்!

சென்னை: முதல்கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தமிழகம் உட்பட நாடு முழுவதும் உள்ள 102 தொகுதிகளில் நடைபெறுகிறது. இந்நிலையில், வாக்குச்சாவடியில் வரிசையில் நிற்பவர்களின் எண்ணிக்கை குறித்த விவரத்தை இணையதளம் மூலமாக வாக்காளர்கள் அறிந்து கொள்ள உதவும் அம்சம் குறித்து பார்ப்போம்.

முதல்கட்ட மக்களவைத் தேர்தலில் சுமார் 16.63 கோடி வாக்காளர்கள் தங்களது வாக்கினை செலுத்த உள்ளனர். இந்த சூழலில் தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளிலும் அமைந்துள்ள வாக்குச்சாவடிகளில் வரிசையில் நிற்பவர்களின் எண்ணிக்கை குறித்த விவரத்தை அறிந்து கொள்ள உதவுகிறது https://erolls.tn.gov.in/queue/ என்ற இணையதள முகவரி.

கருத்துரையிடுக

0 கருத்துகள்