Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

PBKS vs MI | கடைசி ஓவர் வரை போராடிய பஞ்சாப் - 9 ரன்களில் மும்பை வெற்றி!

முலான்பூர்: நடப்பு ஐபிஎல் சீசனின் 33-வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 9 ரன்களில் வென்றுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. பஞ்சாப் அணிக்காக ஷஷாங் சிங் மற்றும் அஷுதோஷ் சர்மா ஆகியோர் அதிரடியாக ஆடி ரன் சேர்த்தனர். இறுதி ஓவர் வரை இலக்கை எட்ட போராடி இருந்தது அந்த அணி.

முலான்பூரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ், 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்தது. சூர்யகுமார் யாதவ் 78 ரன்கள் எடுத்தார். ரோகித் 36 மற்றும் திலக் 34 ரன்கள் எடுத்திருந்தனர். பஞ்சாப் சார்பில் அதிகபட்சமாக 3 விக்கெட்களை கைப்பற்றினார் ஹர்ஷல் படேல்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்